Thursday 15 January 2015


"கல்தோன்றா மண்தோன்றா காலத்தே மூத்தகுடி
பிறப்பாலும் குணத்தாலும் உயர்ந்தகுடி  
உலகின் தலைசிறந்த குடி 
உலகின் முதல் போர்க்குடி வீரப்பெருங்குடி  
கொங்குநாட்டின் ஆதிகுடி அரச குடி 
வெட்ட வெட்ட தழைக்கும் குடி 
கும்பிட்டாரை வெட்டாத குடி 
எவருக்கும் தலைவணங்காத குடி 
போரில் புறமுதுகு காட்டாத குடி 
நம்பினோரை வாழவைக்கும் குடி"
                               - கொங்கு வேட்டுவகவுண்டர் 



கொங்கு நாட்டில் பொதுவாக வேட்டுவகவுண்டர்களை கொங்கு தேச ராஜாக்கள் என்று அழைக்கப்பட்டதை பஞ்சவர்ண ராஜ காவியம் கூறுகிறது.

சேரப்பேரரசர் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரி பாடல் மூலமாக
 "உலகின் தலை சிறந்த குலம் வேட்டுவர் குலமே" எனக் கூறியுள்ளார்.

 வேட்டுவ சாதினர் தமிழ் மண்ணில் முதன் முதலில் வேட்டு(குடி காவல் மற்றும் போர் தொழில் )
வினை செய்ததால் 'வேட்டுவர் என்ற சாதி உருவானது . கி பி100,630,900,1100,1200 களில் படை தொழிலுக்கு வந்த சாதிகள்
 'வேட்டுவர் இனம் கிடையாது .
வேடர் ( வேட்டையாடும் தொழில் செய்பவர்கள்) களில் பல வகைகள் (பிரிவுகள் ) இருந்தன .அந்த பிரிவுகளில் ஓன்றுதான் வேட்டுவர் இனம் ( முடி மன்னர் பரம்பரையினர்,தமிழ் மண்ணில் முதன் முதலில் படை தொழிலுக்கு வந்தவர்கள்,தமிழ் மண்ணில் முதன் முதலில் அரச அமைப்பை உருவாக்கி ஆண்டவர்கள் ). வேட்டையாடும் தொழில்(வேடர் ) செய்த எல்லா பிரிவுகளும் 'வேட்டுவர் சாதி'கிடையாது .பொதுவாக வேட்டையாடும் தொழில் செய்தவர்களை வேடர் அல்லது வேட்டவர் அல்லது வேடுவர் அல்லது வேட்டையாடுவோர் என அழைக்கபட்டன. வேட்டுவ இனத்தவரும் (முடி மன்னர் பரம்பரையினர்) வேட்டையாடுதலில் ஈடுபட்டதால் வேடர் அல்லது வேட்டவர் அல்லது வேடுவர் அல்லது வேட்டையாடுவோர் என அழைக்கபட்டன. வேட்டுவர் சாதி ,வேடர் சாதியை விட உயர்ந்தவர்கள் . வேட்டுவ இனத்தவர்கள் ,வேடர் சாதியை விட உயர்ந்தவர்கள் என கூறி கொண்டதை தென்இந்திய குடிகளும் குலங்களும் தொகுதி -7 கூறுகிறது .

சேர அரசர் வில் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர் .சோழர் அரசர் புலி வேட்டுவ குலத்தை சேர்ந்தவர் .பாண்டிய அரசர் மீன் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர் .
தமிழ் மண்ணில் முதன் முதலில் படைதொழிலில் ஈடுபட்ட வேட்டுவ இனத்தில் இருந்துதான் சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் உருவானார்கள் .

கொங்கு வேட்டுவக் கவுண்டர் சமூகத்தினர் ஆரம்ப காலங்களில் போர்த்தொழில்வேட்டையாடுவதையும்,விவசாயத் தொழிலையும் செய்து வந்தவர்கள். இவர்களுக்கும் சிவபக்தரான கண்ணப்ப நாயனார்க்கும் மிக நெருங்கிய உறவு இருப்பதாக அறியப்படுகிறது. இவர்கள் கண்ணப்ப நாயனாரை இன்றும் தெய்வமாக வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஏராளமானவர்கள் மன்னர்களாகவும்,போர்படைத் தளபதிகளாகவும்வீர மறவர்களாகவும் வாழ்ந்துள்ளனர். கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ஓரி என அழைக்கப்பெறும் வல்வில் ஓரியும் வேட்டுவ கவுண்டர் இனத்தைச் சார்ந்தவன் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோடை மலையை ஆண்ட கடிய நெடு வேட்டுவன் தோட்டி மலையை ஆண்ட கண்டீரகோப்பெருநள்ளி அவருடைய தம்பி இளங்கண்டீரக்கோ முதிரை மலையை ஆண்ட குமணவள்ளல் மூவேந்தர்களையும்(சேர,சோழ,பாண்டிய மன்னர்களையும் ) களப்பிரர்களிடம் இருந்து காப்பாற்றிய வெஞ்சமாக்கூடல் மன்னன் வீர வெஞ்சமன் என்பவனும் வேட்டுவ கவுண்டர் இன மன்னன் என தெளிவாக குறிக்கப்படுகிறார்கள்.
வேட்டுவக்கவுண்டர்களுக்கு கவுண்டர்,ராயர்,வள்ளல்,கொங்கு தேச ராஜாக்கள்,குருகுலத்து வேட்டுவ ராஜாக்கள்
என பல பட்டப்பெயர்கள் உள்ளது.

கவுண்டர் பட்டம் எவ்வாறு வழங்கப்பட்டது?

     
       காவுண்டார் போர்க்களத்தில் கலங்கண்டார் சரித்திரத்தில் களம் கண்டு காவுண்டதாலே கவுண்டர் பட்டம்
வேட்டுவர்களுக்கு  வழங்கப்பட்டது என பூர்வ பட்டயத்தால் அறியலாம் .

ராயர் பட்டம் எவ்வாறு வழங்கப்பட்டது?

   
       பாண்டிய மன்னர்களால் கொங்கு ராயர் என வேட்டுவக்கவுண்டர்களுக்கு  பட்டம் வழங்கப்பட்டது.

வள்ளல்  பட்டம் எவ்வாறு வழங்கப்பட்டது?


 புறநானூற்றின் வாயிலாக வல்வில் ஓரி,கண்டீரகோப்பெரு நள்ளி,வேள் ஆய் அண்டிரன்,குமண வள்ளல்,
போன்றோர் வள்ளல்களாக இருந்தனர்.அவர்கள் வேட்டுவக்கவுண்டர்  இனத்தை சார்ந்த குறுநில மன்னர்கள் ஆவார் .

கொங்கு தேச ராஜாக்கள்


வேட்டுவக்கவுண்டர்களின் புகழ் பாடும் பஞ்சவர்ண ராஜா காவியம் வேட்டுவக்கவுண்டர்களுக்கு கொங்குதேச ராஜாக்கள்
என்று மற்றொரு பெயர் இருந்ததை விவரிக்கின்றது.

குருகுலத்து வேட்டுவ ராஜாக்கள்

 வேட்டுவக்கவுண்டர்களின் புகழ் பாடும் குருகுல காவியம் வேட்டுவக்கவுண்டர்களுக்கு குருகுலத்து வேட்டுவ ராஜாக்கள்
என்று மற்றொரு பெயர் இருந்ததையும் விவரிக்கின்றது.இன்றைக்கும் சிவனுக்கு கண் கொடுத்த கண்ணப்பருக்கு மட்டும் தான் குரு குல பூஜை 
ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது .

பொருளடக்கம்


    1 கொங்கு வேட்டுவ கவுண்டர் வரலாற்றிக்கான ஆதாரங்கள்
    2 கல்வெட்டுகள்
    3 செப்பேடுகள்
    4 புராணங்கள் மற்றும் இலக்கியங்கள்
    5 நினைவுச்சின்னங்கள்
    6 வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்
    7 நாகர்
    8 குரு குலத்தவர்
    9 கண்ணப்ப நாயணாரின் கால்வழியினர்
    10 பூர்வ குடிகள்
    11 வேட்டுவரின் பிற பெயர்கள்
    12 வேட்டுவ கவுண்டரின் குலங்கள்
    13 வேட்டுவக்கவுண்டர்களின் குலப்பிரிவுகள்
    14 குலப்பெயர்க் காரணங்கள்
    15 காலந்தோறும் வேட்டுவர்
    16 வரலாற்றுக்கு முற்பட்டகாலம்
    17 சங்ககாலமும் அதன் பின்னரும் (கி.மு. 3 முதல் கி.பி. 9 வரை)
    18 சோழர் காலம்
    19 சோழருக்குப் பின்னர்
    20 காணியாளர்
    21 ஊராளிகள்
    22 பாளையக்காரர்கள்
    23 படைத்தலைவர்கள்
    24 ஆதாரம்
    25 வெளி இணைப்புகள்
    26 மேற்கோள்கள்

கொங்கு வேட்டுவ கவுண்டர் வரலாற்றிக்கான ஆதாரங்கள்


கொங்கு நாட்டு வேட்டுவ கவுண்டரைப்பற்றி அறிந்துக கொள்ளப் பலவிதமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை நாம் கல்வெட்டுகள்செப்பேடுகள்,இலக்கியங்கள்புராணங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் என்னும் பிரிவுகளாகப் பிரித்துக் காணலாம்.

கல்வெட்டுகள்


பெரும்பாலும் திருக்கோயில்களில் காணப்படுகின்றன். நடுகற்கிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் வேட்டுவ கவுண்டர் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக திருவெஞ்சமாக்கூடல்வெங்கம்பூர்,திருமுருகன் பூண்டி,அவினாசிதிருசெங்கோடுபுதுக்கோட்டைகருவூர் ஈரோடு (கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியகம்)ஏழூர் (நாமக்கல் மாவட்டம்),மூக்குத்தி பாளையம் (சேலம் மாவட்டம்)பருத்திப்பள்ளி (சேலம் மாவட்டம்),வாழவந்தி அருகில் உள்ள குட்லாம்பாறை (நாமக்கல் மாவட்டம்) முதலான ஊர்களில் உள்ள கல்வெட்டுகளைக் குறிப்பிடலாம். பழமங்கலம்சேலம் அருங்காட்சியகம்கூலிப்பட்டிதுக்காச்சி கொக்கராயன் பேட்டை,சிவகிரிஅந்தியூர் நடுகல் கல்வெட்டுகளும் வேட்டுவ வீரர்களின் அஞ்சாமைப் பற்றி கூறுகின்றன.

செப்பேடுகள்


ஊசிப்பாளையம் செப்பேடுதென்னிலைப்பட்டயம்திருச்செங்கோடு அல்லாளன் இளையான் பட்டயம்தருமபுரிப் பட்டயம்வெள்ளோட்டுப் பட்டயம்தலையூர் பட்டக்காரர் பட்டயம்புதுர் பட்டக்காரர் பட்டயம்,எட்டரைப் பட்டயம் (திருச்சி வட்டம்)சோழன் பூர்வ பட்டயம் மற்றும் காளிங்கராயன் அணை கட்டிய பட்டயம் ஆகியனவும் வேட்டுவ கவுண்டரின் வீர வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

புராணங்கள் மற்றும் இலக்கியங்கள்


கருவூர்ப்புராணம்திருவெஞ்சமாக்கூடல் புராணம்,திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலைதிருச்செங்கோட்டுப் புராணம்வெள்ளாளர் புராணம்பழனி ஓலைச் சுவடிகள்குருகுல காவியம்குருகுல வரலாறுபஞ்சவர்ணராஜ காவியம்,கள்ளழகர் அம்மானைஓதாளர் குறவஞ்சிமெக்கன்ஸியின் கையெழுத்துப்பிரதிகள்வில்சனின் கையெழுத்துப்பிரதிகள்கொங்கு மண்டல சதகம்அவினாசிப் புலவரின் திங்களூர் நொண்டி நாடகம்,சங்க இலக்கியங்கள்,சிலப்பதிகாரம் மற்றும் மாந்தரஞ்சேரல் மெய்க்கீர்த்தி முதலான இலக்கியங்களும்புராணங்களும் வேட்டுவரின் சமுதாய வாழ்வு பற்றிய செய்திகளைச் செப்புகின்றன. சிலப்பதிகார வேட்டுவரிப் பாடல்கள் வேட்டுவ கவுண்டரின் வாழ்க்கை முறையைச் சித்தரிக்கின்றன.

நினைவுச்சின்னங்கள்


வேட்டுவரின் நடுகற்கள்வேட்டுவர் காலத்தில் கட்டப்பட்டக் கோயில்கள்,புதுப்பிக்கப்பட்டக் கோயிலகள் முதலான நினைவுச் சின்னங்களும் வேட்டுவரது வரலாற்றை உருவாக்கப் பயன்படுகின்றன. வேட்டுவ பட்டக்காரர்கள் காலத்திய இடிந்த கோட்டைகள்வெட்டிய ஆறுகள்குளங்கள் ஆகியன அவர்களது ஆட்சியின் சிறப்பைக் கூறுகின்றன.
கோவைக்கிழார் எழுதியுள்ள கொங்கு நாட்டு வரலாறு’, வீயாரம் எழுதிய கொங்கு நாட்டுக் கவுண்டர்கள்’, முனைவர் ஆரோக்கியசாமி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய “The Kongu Country” (கொங்கு நாடு)பேராசிரியர்கள் ம இராசசேகரதங்கமணி மற்றும் எம் சண்முகவேலு ஆகியோர் வேட்டுவர் குரல்’ எனும் மாதாந்திர இதழில் எழுதியுள்ள கட்டுரைகள்தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளகொங்கு நாட்டு ஆவணங்கள்’ எனும் நூல்கல்வெட்டறிஞர் புலவர் செ இராசு அவர்கள் கொங்கு’ இதழில் வெளியிட்டுள்ளக் கட்டுரைகள் ஆகியன வேட்டுவ கவுண்டரின் வரலாறு பற்றி ஆய்வு செய்யத் துணைபுரிகின்றன.

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்


வேட்டுவரின் பூர்வீகம் குறித்து அறிஞர்களிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வேட்டுவர்பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி வம்சத்தினர் என்று வேளாளர் புராணம் குறிப்பிடுகிறது. சோழன் பூர்வ பட்டயம்வேட்டுவ கவுண்டர்களைக் கொங்கு நாட்டின் ஆதிகுடிகள் என்று சுட்டுகின்றது. சில பட்டயங்களில் வேட்டுவர்முத்தரையரின் வழித்தோன்றல்கள் என்று செப்புகின்றன. வேட்டுவ கவுண்டரும் முத்தரையரும் கண்ணப்ப நாயனாரைத் தமது குல தெய்வமாகக் கொண்டு வழி படுகின்றனர். எட்கார் ஃதர்ஸ்ட்டன் (Edgar Thurston) அவர்கள் முத்தரையர்வேட்டுவர்வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். இருப்பினும் வேட்டுவரின் பூர்வீகம் குறித்து நான்கு முக்கிய கொள்கைகள் (கருத்துக்கள்) உள்ளன. அவை

    வேட்டுவர் நாகர் இனத்தவர்
    குரு குலத்தவர்
    கண்ணப்ப நாயனாரின் கால்வழியினர்
    கொங்கு நாட்டின் பூர்வீகக் குடிகள்

இக்கொள்கைகளின் உண்மைத் தன்மையை இங்கே ஆய்வோம்.

நாகர்


வேட்டுவர் நாகர் இனத்தவரே என்று கனகசபைப்பிள்ளை[1] குறிப்பிட்டுள்ளார். நாகரும் வேட்டையாடும் இனத்தின் தலைவர்களே ஆவர். எனவே தொழில் ஒற்றுமை கருதிவேட்டுவரை நாகர் இனத்தினர் எனும் கனகசபையின் கருத்தினைப் பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழகத்தின் பூர்வ குடிகளுள் நாகரும் ஒருவர் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துதான். ஆனால்கொங்கு நாட்டில் பழங்காலத்தில் நாகர்கள் வாழ்ந்தமைக்கோநாகர் வேட்டுவரின் முன்னோர் என்பதற்கோ இதுகாறும் சான்றுகள் கிடைக்கவில்லை. என்வே இக்கருத்து பொருத்தமுடையதல்ல.

குரு குலத்தவர்


புராணங்களும் பழங்கதைகளும் வேட்டுவரை குருகுலத்தினர் எனக் கூறும். பாண்டவர்கெளரவர் ஆகியோர் குருகுலத்தவர். பாண்டவரது வீழ்ச்சிக்குப் பின்னர் இவர்களது கால்வழியினர் சிலர்தென்னிந்தியாவிற்கு வந்துபொத்தப்பி நாட்டை உடுப்பூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். பொத்தப்பி நாடு,தொண்டை நாட்டை ஒட்டி அமைந்துள்ளது. இவ்வம்சத்தில் தோன்றியுள்ள வேந்தருள் நாகராஜன் குறிப்பிடத்தக்கவன். இவ்வேந்தனது மகன் கண்ணப்பன். கண்ணப்பனுக்கு வேட்டுவன்வேடன்காவிலவன்பூவிலவன் மற்றும் மாவிலவன் எனும் ஐந்து மக்கள் இருந்தனர். கண்ணப்பனுக்குப் பின்னர் மூத்த மகனான வேட்டுவன் என்று அழைக்கப்பட்டனர். இக்கருத்தினை வேல்சாமி கவிராயர் என்பார் குருகுல வரலாறு’ எனும் நுலில் குறிப்பிடுகிறார். இக்கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

கண்ணப்ப நாயணாரின் கால்வழியினர்


மேற்கூறப்பட்டுள்ள கருத்தும் வேட்டுவர் சைவ நாயன்மாராகிய கண்ணப்ப நாயணாரின் கால்வழியினர் என்னும் கருத்தும் ஏறத்தாழ ஒன்றுதான். வேட்டுவ கவுண்டப் பட்டக்காரர்களின் பட்டயங்களிலும், ‘திங்களுர் நொண்டி நாடகம்’[2]எனும் கையெழுத்துப் பிரதியிலும் வேட்டுவரின் முன்னோன் கண்ணப்பர் என்று கூறப்பட்டுள்ளன. புராணகாலத்தலைவர்களுள் புகழ் மிக்கவரைத் தனது முன்னோன் என்று கூறிக்கொள்ளும் வீண் பெருமை பலருக்கு உண்டு. இது அவ்வகையைச் சார்ந்த்தே. கண்ணப்பர் வேட்டுவர் குலத்தவர் என்பதும் உண்மையே. அவரை வேட்டுவ கவுண்டர் வணங்கி வருவதும் உண்மையே. ஆனால்இவரே வேட்டுவ கவுண்டரின் முன்னோர் என்று கூறுதல் பொருந்தாது. இவன் காளகஸ்தி வேடன் என்பது யாவரும் அறிந்ததே.

கொங்கு நாட்டின் பூர்வ குடிகள்


இவர்கள் கொங்கு நாட்டின் பூர்வ குடிகள் என்பதற்குப் பலவிதமான ஆதாரங்கள் உள்ளன. சங்க இலக்கியங்களும்கல்வெட்டுகளும் இக்கருத்தை உறுதி செய்கின்றன. பல அறிஞர்களும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர்.[3] வேட்டுவர்கள் தங்கட்கு அதிக எண்ணிக்கையில் படை தேவைப்பட்டபோது காளஹஸ்தி சென்று,அங்கிருந்த வேட்டுவ வேந்தனிடம் படை உதவி பெறுவதுண்டு. ஒருகால கட்டத்தில் காளஹஸ்தியில் இருந்த வேட்டுவர் கொங்கு நாட்டில் குடியேறியுள்ளனர். இதனால்வேட்டுவர் காளஹஸ்தி வேந்தரிடையே சுமுகமான உறவும் இருந்தது. இதனை வைத்துக்கொண்டு வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம் காளஹஸ்தி எனக் கூறுதல் தவறாகும்.

பழைய கோட்டைப்பட்டக்காரர் செப்பேடுகளில் கார்வெளிவெளு(வேள்) வேட்டுவ முத்திரைக்காரர் ஒருவர் குறிக்கப்பெறுகிறார். வேட்டுவ கவுண்டப் பட்டக்காரருள் ஒருவரான தலைய நாட்டுவள்ளல் கவுண்டர் என்பார் சுந்தரபாண்டிய தண்டெறி முத்துராஜா என்று மெக்கன்ஸியால் குறிக்கப்பெறுகிறார். வேட்டுவ கவுண்டருள் கொங்கர் செல்வ முத்தரையன்சோழ முத்தரையன்சிய முத்தரையன்சேந்த முத்தரையன் முதலானோர் குறிக்கப்படுகின்றனர். கோபி வட்டம் கொங்கர் பாளையத்தில் இன்றும் பெரும் அளவில் முத்தரையர் வசிக்கின்றனர். திருச்சி மாவட்டம்திருச்சி வட்டத்திலும் (குறிப்பாக வடசேரிப் பகுதி) குளித்தலை வட்டத்திலும் வாழ்ந்து வருகின்ற ஊராளிக் கவுணடர்கள் முத்தரையர்கண்ணப்பர் குலவலையர் என அழைக்க்படுகின்றனர். கொங்கு நாட்டின் பல பகுதிகளில் கண்ணப்பருக்கு வழிபாடு நிகழுங்கால் முத்தரையரி முதலுரிமை பெறுகின்றனர். இவற்றை நுண்ணிதின் ஆராய்ந்து பார்க்குங்கால் வேட்டுவருக்கும்,முத்தரையர்க்கும் ஏதோ ஒருவிதமான நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதனை ஊகிக்கலாம். ஒருவேளை இவர்கள் இருவரும் ஓர் இனத்தவராகவும் இருக்கலாமோஎன்ற ஐயமும் ஏற்படுகிறது.
வேட்டுவரின் பிற பெயர்கள்

வேட்டையாடுதலைத் தமது முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள் வேட்டுவர்கள். வேடர் என்ற சொல்லே வேட்டுவர் என் ஆயிற்று. இவர்கள் வேடன்வெற்பன்சிலம்பன்எயினன்ஊரன்வேட்டைக்காரன்வேட்டுவன்,வேட்டுவதியரையன்ஊராளிவேட்டுவ கவுண்டர் மற்றும் நாடாழ்வான் முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். இவர்கள் கவுண்டர்காடவராயன்மன்றாடியார்,பல்லவராயர்வானவதிராயன்காங்கயன்நாயக்கர்முத்தரையர்காடுவெட்டி,ராயர்வள்ளல்கொங்கு ராயர்ஊர்க்கவுணடர்கங்கதிராயர் மற்றும் பிள்ளை முதலான பட்டங்களைப் பெற்றிருந்தினர் என்பதனைக் கல்வெட்டுக்களால் அறியலாம். வேட்டுவ வேந்தர்களோ பல்லவராயர்பூவலராயர்சந்தனராயர் மற்றும் நரசிங்கராயர் முதலான பட்டப் பெயர்களைப் பூண்டிருந்தனர் என்பதனைக் குறிப்பு நாட்டுச் செப்பேட்டால் அறியலாம்.

வேட்டுவ கவுண்டரின் குலங்கள்


கொங்கு நாட்டு வேட்டுவ கவுண்டரிடையே பல பிரிவுகள் காணப்படுகின்றன. இவர்களிடையே,
    வேட்டுவர்
    வேடர்
    காவிலுவர் (காவவர்)
    மாவிலுவர் (மாவலர்)
    பூவிலுவர் (பூவலர்பூலுவர்)

எனும் ஐம்பெரும் பிரிவுகள் இருந்தனவென்று பழங்கால இலக்கியங்கள் கூறுகின்றன. [1]காவலர் என்போர் நாடு காவல் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் போலும். இவர்களே முத்தரையர் ஆகலாம். பூவிலர் நிலம் தொடர்பான அதாவது வேளாண்மை புரிந்தனர். மாவிலர் என்போர் பெரும் வலிமை படைத்தவர். அதாவது போர்த்தொழிலில் ஈடுபட்டவர் எனலாம். இவைகள் தொழில் அடிப்படையில் ஏற்பட்டப் பிரிவுகள் ஆகும்.

வேட்டுவ கவுண்டர்கள் குலம் அடிப்படையிலும் பல பிரிவுகளாகப் பிரிந்திருந்தினர். சிலர் தாம் எந்த ஊரிலிருந்து குடிபெயர்ந்தனரோ அந்த ஊரின் பெயரைத் தமது குலப்பெயராகக் வைத்துக் கொண்டனர். சிலர் பறவைகள்,விலங்குகள்மரம்செடிகொடிவீரம் மற்றும் பண்பு ஆகியவற்றையும் தமது குலப்பெயர்களாகக் கொண்டனர்.

வீரப்பெருங்குடியினரான வேட்டுவரிடையே பல குலங்கள் ஏற்பட்டன. இவை எத்தனை என்பதனை நாம் அறுதியிட்டு உறுதியாகக் கூறவியலாது. எனவே தான்வேர் வகையை எண்ணினாலும்வேட்டுவர் வகையை எண்ணமுடியாது” எனும் முதுமொழியும் ஏற்பட்டுள்ளது.

பழமங்கலம் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள கரைய குலச் சொக்கனேந்தல்என்னும் பெயர் மூலம், “குலம்” என்னும் சொல் வேட்டுவர் இனத்தில் பண்டைய காலத்திலேய வழக்கில் இருந்துள்ளது என்பதனை உறுதிபடுத்துகிறது.

இங்கு நாம் குருகுல வரலாறுபஞ்சவர்ண ராசகாவியம்சோழன் பூர்வப்பட்டயம்,செப்பேடுகள்கல்வெட்டுகள்நடுகற்கள் ஆகியவை மூலம் அறியப்படுகின்ற 203குலங்களின் பெயர்களை மட்டும் காண்போம்.

வேட்டுவக்கவுண்டர்களின் குலப்பிரிவுகள்


    அண்டை வேட்டுவர்
    அரிச்சந்திர வேட்டுவர்
    அந்தி வேட்டுவர்
    அக்னி வேட்டுவர்
    அந்துவ வேட்டுவர்
    அன்னல் மீளவேட்டுவர்
    அல்லாள வேட்டுவர்
    ஆப்ப வேட்டுவர்
    அமர வேட்டுவர்
    இரும்புலி (இரும்புளை) வேட்டுவர்
    ஆமை வேட்டுவர்
    இந்திர வேட்டுவர்
    இலங்கை வேட்டுவர்
    உண்ணாடி வேட்டுவர்
    ஈங்குறு வேட்டுவர்
    உதிர வேட்டுவர்
    உண்ணாடி வேட்டுவர்
    உம்பி வேட்டுவர்
    உத்திர வேட்டுவர்
    உயிர் வேட்டுவர்
    உயர வேட்டுவர்
    உறுமுக வேட்டுவர்
    உரிமைப் படை வேட்டுவர்
    கஞ்சி வேட்டுவர்
    ஊராளி வேட்டுவர்
    கதிரிகளனை வேட்டுவர்
    கதிப்ப வேட்டுவர்
    கரட்டு வேட்டுவர்
    கதுகாலி வேட்டுவர்
    கருவளி வேட்டுவர்
    கரடி வேட்டுவர்
    கரும் புனித வேட்டுவர்
    கரிப்படை வேட்டுவர்
    கரைய வேட்டுவர்
    கருவண்ட வேட்டுவர்
    கவுண்டி வேட்டுவர்
    களங்க வேட்டுவர்
    கள்ளை வேட்டுவர்
    கற்பூர வேட்டுவர்
    கன்னி வேட்டுவர்
    காக்காவாடி வேட்டுவர்
    காச வேட்டுவர்
    காட்டு வேட்டுவர்
    காரி வேட்டுவர்
    காவலர்
    காவலன் குறும்பில்லர்
    காவலன் மன்றாடி
    காவலன் மேலைக் கறையர்
    காவலன் வளவர்
    காவலர் வெண்கொற்றர்
    காடை வேட்டுவர்
    காரிய வேட்டுவர்
    காழைய வேட்டுவர்
    கிழங்க வேட்டுவர்
    கீரந்தை வேட்டுவர்
    கீரை வேட்டுவர்
    குடுமி வேட்டுவர்
    குருக்கல் வேட்டுவர்
    குளுவ வேட்டுவர்
    குறுங்காடை வேட்டுவர்
    குறும்ப வேட்டுவர்
    குறுண்டி வேட்டுவர்
    குன்னாடி வேட்டுவர்
    கூச்சந்தை வேட்டுவர்
    கூத்தாடி வேட்டுவர்
    கூரம்ப வேட்டுவர்
    கொடுகத்தாளி வேட்டுவர்
    கொட்டாப் புலி வேட்டுவர்
    கொடுமுடி வேட்டுவர்
    கோமுக வேட்டுவர்
    கொல்லி வேட்டுவர்
    கொன்றை வேட்டுவர்
    கோதண்ட வேட்டுவர்
    கோமாளி வேட்டுவர்
    கௌதாரி வேட்டுவர்
    சரக்கு வேட்டுவர்
    சர்க்கரை வேட்டுவர்
    சாக்களி வேட்டுவர்
    சாதி வேட்டுவர்
    சாந்தப்படை வேட்டுவர்
    சாத்தந்தை வேட்டுவர்
    சித்ச வேட்டுவர்
    சித்த வேட்டுவர்
    சிலை வேட்டுவர்
    சிறத்தலை வேட்டுவர்
    சாந்தப்படை வேட்டுவர்
    சுண்ட வேட்டுவர்
    சுரண்டை வேட்டுவர்
    சுல்லி வேட்டுவர்
    சுறண் வேட்டுவர்
    செங்கண் வேட்டுவர்
    செம்ப வேட்டுவர்
    சேதாரி வேட்டுவர்
    சேர வேட்டுவர்
    சொட்டை வேட்டுவர்
    சொர்ண வேட்டுவர்
    தழும்ப வேட்டுவர்
    தரைய கரைய
    தாலி வேட்டுவர்
    திட்ட வேட்டுவர்
    தும்பை வேட்டுவர்
    துர்க்கை வேட்டுவர்
    பள்ள வேட்டுவர்
    பம்பை வேட்டுவர்
    பரந்தை வேட்டுவர்
    பருத்தி வேட்டுவர்
    பௌத்ரம் வேட்டுவர்
    மணிய வேட்டுவர்
    மலைய வேட்டுவர்
    மந்திர வேட்டுவர்
    மயில வேட்டுவர்
    மாடந்தை வேட்டுவர்
    மாச்சாடி வேட்டுவர்
    மாந்தப் படை வேட்டுவர்
    மான வேட்டுவர்
    முரட்டு வேட்டுவர்
    முகிழ வேட்டுவர்
    மும்முடி வேட்டுவர்
    முழக்க வேட்டுவர்
    முளை வேட்டுவர்
    முன்னை வேட்டுவர்
    மூளை வேட்டுவர்
    மூல வேட்டுவர்
    மொயர வேட்டுவர்
    மோளை வேட்டுவர்
    மோக்காளி வேட்டுவர்
    மின்ன வேட்டுவர்
    பலகை வேட்டுவர்
    பலத வேட்டுவர்
    பறவை வேட்டுவர்
    பரப்பள வேட்டுவர்
    பரிப்படை வேட்டுவர்
    பறைப்படை வேட்டுவர்
    பத்திர வேட்டுவர்
    பாண்டிய வேட்டுவர்
    பாசறை வேட்டுவர்
    பால வேட்டுவர்
    பாரி வேட்டுவர்
    பிரம்ப வேட்டுவர்
    பீச்ச வேட்டுவர்
    புன்னாடி வேட்டுவர்
    புதர வேட்டுவர்
    புன்ன வேட்டுவர்
    புட்ப வேட்டுவர்
    புலி வேட்டுவர்
    புள்ளை வேட்டுவர்
    பூச்சந்தை வேட்டுவர்
    பூவாணிய வேட்டுவர்
    பூலுவன் உத்தரர்
    பூலுவன் குப்பகள்
    பூலுவன் செய்யகள்
    பூலுவன் பெரும்பற்றார்
    பூலுவன் மயிலர்
    பூலுவ வேட்டுவர்
    பூழை வேட்டுவர்
    பெயர வேட்டுவர்
    பெருமாள் வேட்டுவர்
    பேரீஞ்சை வேட்டுவர்
    பொன்ன வேட்டுவர்
    மினுக்க வேட்டுவர்
    மீள வேட்டுவர்
    மின்ன வேட்டுவர்
    ராசி வேட்டுவர்
    வராக வேட்டுவர்
    வடுக வேட்டுவர்
    வன்னி வேட்டுவர்
    வாகை வேட்டுவர்
    விசயமங்கல வேட்டுவர்
    விளக்கு வேட்டுவர்
    வில்லி வேட்டுவர்
    விறகு வேட்டுவர்
    வினைய வேட்டுவர்
    வீர வேட்டுவர்
    வெங்கச்சி வேட்டுவர்
    வெள்ளை வேட்டுவர்
    வெற்ப வேட்டுவர்
    வேல் வேட்டுவர்
    வேந்தை வேட்டுவர்
    வேதகிரி வேட்டுவர்
    ஜெய வேட்டுவர்
    ஜெயவேந்த வேட்டுவர்

குலப்பெயர்க் காரணங்கள்


இக்குலப் பெயர்கள் எவ்வாறு தோன்றினஎன்பதற்கான சில விளக்கங்களையும் இங்கே காணலாம். சிலவற்றிக்கான பெயர்காரணங்கள் முழுமையாக ஆராயப்படவில்லை. இவற்றுள் கரடிகடம்புலிபுலிநரியஆமை மற்றும் வராஹ ஆகியன விலங்குகளின் பெயர்களையும்காடைகுறுங்காடைகெளதாரிபறவை,மயில்அந்துவ மற்றும் பூச்சந்தை ஆகிய பெயர்கள் பறவைகளின் பெயர்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுந்த்தன.
கொன்னைதும்பை மற்றும் புட்ப ஆகிய வேட்டுவ இனப்பிரிவுகள் பூக்களின் பெயரால் ஏற்பட்டன.


கீரைமணியபன்னபுல்லைபனையவாகைவன்னிபுன்ன மற்றும் விறகு ஆகியன செடிமரங்களின் பெயர்களைக் கொண்டுள்ளன.

வேட்டுவர்கள் வீரப்பெருங்குடி மக்கள். போர் அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. விழுப்புண்படாத நாட்களை வீண் நாட்களாகக் கருதுபவர்.
 இவர்கள் பலவகைப் பட்ட படைப் பிரிவுகளில் பணிபுரிந்தனர். கீழ்காணும் குலப்பெயர்கள் இவற்றை உணர்த்துவதாக உள்ளன.
சொட்டை என்பது ஒரு படைக்கருவி.

கரிப்படைபரிப்படை(குதிரைப்படை)உரிமைப்படைசாந்தப்படை(யானைப்படை),மாந்தப்படைபாசறைவீரசொட்டைபறைப்படை மற்றும் பம்பை ஆகியன் போர்ப்படைகளாகும்.

வேட்டுவரின் பல்வேறு பண்புகளைஉருவத்தைகுணங்களை விளக்குவதாகவும் சில குலப்பெயர்கள் அமைந்த்துள்ளன. சில உடலின் பகுதிகளையும் குறிப்பின. அவை மானமுரட்டுமின்னமினுக்கபொன்னசிறுத்தலைமூலைகுடிமிசெம்ப மற்றும் வெள்ளை என்பனவாகும். சிறுத்தலை வேட்டுவன் எனும் பெயரில் வீரத்தலைவன் ஒருவன் இருந்தான். இவ்வீரன் கபிலர் மலைமுதல் கைதீண்டா பாழி வரை உள்ளப் பகுதிகளை ஆண்டு வந்தான். அவன் வழயினரும் சிறுத்தலை வேட்டுவர் எனப்பட்டனர்.

பாண்டி வேட்டுவர்சேர வேட்டுவர் எனும் பெயர்கள் அவர்களது தலைவர்களுக்கு அவர்கள் செலுத்திய மரியாதையையும்நன்றிக் கடனையும் வெளிப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக பாண்டிய வேந்தனின் கீழ் பணி புரிந்த முன்னோன் (அல்லது தலைவனின்) வழிவந்தவர்கள் பாண்டிய வேட்டுவர் ஆவர்.

தமது சொந்த ஊரின் பெயரை நினைவு கூர்தல் பொருட்டும் குலப்பெயர்கள் இடப்ப்ட்டன. உதாரணமாககொல்லி மலையில் வாழ்ந்தகொல்லி மலையைவிட்டு வெளியூர்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் கொல்லி வேட்டுவர் எனப்பட்டனர். கீழ்காணும் பட்டியல் இவர்களது பூர்வீகத்தை நினைவுபடுத்தும்.

     இடத்தின் பெயர்                                 குலப்பெயர்

    விசயமங்கலம்
    வராகமலை
    கொடுமுடி
    காக்காவாடி
    தென்னிலை
    பூவாணிய நாடு
    விசயமங்கல வேட்டுவர்
    வராகமலை வேட்டுவர்
    கொடுமுடி வேட்டுவர்
    காக்காவாடி வேட்டுவர்
    தென்னிலை வேட்டுவர்
    பூவாணிய வேட்டுவர்

இவ்விதமாக புன்னம்பட்டாலிபெள்த்திரம்ஈங்கூர் மற்றும் நொய்யல் முதலான ஊர்களைச் சேர்ந்தவர்கள் தமது குலப் பெயரை ஊர்ப் பெயருடன் அமைத்துக் கொண்டனர்.

சில வேட்டுவ இனப் பிரிவினரின் பெயரால் சில ஊர்கள் பெயரிடப்பட்டுள்ளதையும் இங்கு நாம் அறியலாம். உதாரணமாகஅந்தி வேட்டுவர் நினைவாக அந்தியூர்சலங்கை வேட்டுவர் பெயரால் சலங்கை பாளையம்ஆப்ப வேட்டுவர் பெயரால் ஆப்பக் கூடல்கண்ணாடி வேட்டுவர் நினைவாக கண்ணாடிப்புத்தூர்கரடி வேட்டுவர் நினைவாக கர்டிக் கோயில்கரடிப்பட்டி,வெங்கச்சி வேட்டுவர் பெயரால் வெங்கம்பூர்நஞ்சை வேட்டுவர் பெயரால் நஞ்சை காளக்குறிச்சிமலைய வேட்டுவர் நினைவாக மலையம்பாளையம்மூல வேட்டுவர் பெயரால் மூலனூர்பருத்தி வேட்டுவர் நினைவாக பருத்திப்பள்ளி,காட்டு வேட்டுவர் பெயரால் காட்டுப்பாளையம்கரட்டு வேட்டுவர் நினைவாக கரட்டாம் பாளையம்மின்ன வேட்டுவர் நினைவாக மின்ன வேடுவன் பாளையம்,வராக வேட்டுவர் பெயரால வராகமலைவடுக வேட்டுவர் நினைவாக வடுக பாளையம் மற்றும் பொன்ன வேட்டுவர் நினைவாக பொன்னம்பாளையம் முதலானவற்றைக் குறிப்பிடலாம்.

ஊராளியாககிராமத் தலைவன் போன்று விளங்கியவன் ஊராளி வேட்டுவன் என்ப்பட்டான். உதாரணமாக ஊராளி வேட்டுவன் அழகன் காளி” என வரும் துக்காச்சி நடுகல் கல்வெட்டைக் குறிப்பிடலாம்.

காலந்தோறும் வேட்டுவர்


சங்க காலத்திலும் அதற்கு முன்பும் கொங்கு நாட்டில் வேட்டுவ கவுண்டர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதனைச் சங்க இலக்கியச் சான்றுகளால் அறிகிறோம். இக்காலத் கட்டத்தில் இவர்கள் வேட்டையாடுதலையே தமது தொழிலாகக் கொண்டிருந்தினர். பின்னர் இவர்களது வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டது. இம்முன்னேற்றம் எவ்வாறு இருந்தது என்பதனை இங்கே காண்போம்.

வரலாற்றுக்கு முற்பட்டகாலம்


வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திய பாறை ஓவியங்களும்குகை ஓவியங்களும் கொங்கு நாட்டிலும்அதனை ஒட்டிய பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வேட்டையாடும் காட்சியும்அதன் தொடர்பான காட்சிகளும்விலங்குகளும் தீட்டப்பட்டுள்ளன. இவையாவும் வேட்டுவரது வாழ்க்கை முறையினைச் சித்தரிப்பவையே. கொங்கு நாட்டின் பல பகுதிகளில் ஈமச்சின்னங்களும்புதைகுழிகளும்இறந்தோர் நினைவுக்கற்களும்,பெருங்கற்காலச் சின்னங்களும் காணப்படுகின்றன. இவையாவும் வேட்டையாடும் தொழிலைக்கொண்ட நாடோடி வாழ்க்கையை மேற்கொண்ட வேட்டுவருடையதே என்று அயல் நாட்டு ஆராய்ச்சி அறிஞர் FA நிக்கல்சன் குறிப்பிட்டுள்ளார். இந்த ஈமச்சின்னங்களின் சொந்தக்காரர்களான வேட்டுவ கவுண்டர்கள்கொங்கு நாட்டின் பூர்வகுடிகளே என்பதனைச் சந்தேகத்திற்கு இடமின்றி அறியலாம்.

சங்ககாலமும் அதன் பின்னரும் (கி.மு. 3 முதல் கி.பி. 9 வரை)


சங்ககாலம் தமிழரின் வசந்த காலம். இக்காலத்தில் வேட்டுவர் வேட்டையாடுவதையும் ஆடு மாடு மேய்ப்பதையும் தமது தொழிலாகக் கொண்டிருந்தனர். இதே சமயத்தில் பலர் போர்ப்படையில் வீரர்களாகப் பணி புரிந்தனர். இவர்களுள் சிலர் மலைகளிலும்மலைச் சரிவுகளிலும்,சமவெளிகளிலும் விவசாயம் செய்து வந்ததாகவும் அறிகிறோம். வேட்டுவ கவுண்டர்கள் கள் குடிப்பதில் இன்பம் கண்டனர். கள் குடித்த கடனை அடைப்பதற்கு வேட்டுவர் சிலர் யானைத் தந்தங்களைக் கொண்டு சென்றனர் என்று பதிற்றுப்பத்து கூறுகின்றது. இதன் பொருட்டே "காட்டை விற்று கள் குடித்தாலும் கவுண்டன் கவுண்டன்தான்" என்னும் பழமொழி தோன்றியது எனக் கூறுவோறும் உளர்.

இவர்கள் எருதுச்சண்டைகோழிச்சண்டைஆடல்பாடல் ஆகிய விளையாட்டுகள் மற்றும் கலைகளில் ஈடுபட்டனர். இவர்கள் போர்ப் படைகளில் பணியாற்றியது போன்றுபாடி காவலிலும்நெடுஞ்சாலைகளில் காவலாளிகளாவும்வணிகச் சாத்துக்குக் காவல் வீரர்களாகவும் அமர்த்தப்பட்டனர்.
போர்த்தெய்வமான கொற்றவை மற்றும் காளி ஆகியவற்றை இவர்கள் வணங்கினர். பின்னர் கன்னிமார் தெய்வங்களை வழிபட்டனர்.

சங்க காலத்தில் வேட்டுவ கவுண்ட குலத் தலைவர்கள் சிலர் குறுநில மன்னர்களாகத் திகழ்ந்தனர். இதனைச் சங்கப்பாடல்களால் அறியலாம். இவர்களுள் கோடை மலைத் தலைவனான கடிய நெடு வேட்டுவன்தோட்டிமலை தலைவனான கண்டீரக்கோப் பெருநள்ளிகொல்லிமலைத் தலைவனான வல்வில் ஓரி ஆகியோர் புகழ் பெற்று விளங்கினர். அகநானூறும்கோடைமலைத் தலைவனின் பெருமையைப் பேசுகின்றன. ஓரிமிகச்சிறந்த வில் வீரனாகத திகழ்ந்தான். ஆமூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த குறும்பொறைக்கோமன் (கொடுமுடி) மாவீரனாகத் திகழ்ந்தான்சேரரை வென்றான்;தனது அரசை விரிவுபடுத்தினான்.

இளவெயினனார்எயிற்றியனார்எயினந்தையார் மற்றும் எழூஉப்பன்றி நாகன்குமரனார் போன்ற புலவர் பெருமக்களும் வேட்டுவர் குடிக்குப் பெருமை சேர்த்தனர். வேட்டுவகுலப் பெண்பாற் புலவர்களுள் வெறிபாடிய காமக்கண்ணியார்சுழாரர் சீரன் எயிற்றி ஆகியோர் சிறந்த புலவர்களாகத் திகழ்ந்தனர்.

ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் அலைந்து திரிந்து வேட்டையாடிய வேட்டுவர்,சில காலம் சென்ற பின்னர் ஓரிடத்தில் தங்க ஆரம்பித்தனர். ஒரவகையாக நிலைத்து வாழ்ந்த இவர்கள் உணவு தேடும் நிலைமாறிஉணவு உற்பத்தி செய்யும் நிலைக்கு முன்னேறினர். இதுவே வேட்டுவர் வாழ்வில் நிகழ்ந்த மாபெரும் புரட்சி எனலாம். ஒரேவிதமான தொழிலை மேற்கொண்டுவந்த வேட்டுவர் இக்காலக் கட்டத்தில் பல்வேறு தொழிலில் ஈடுபட்டனர்.

இம்முன்னேற்றத்தால் பல வேட்டுவர் வேட்டைத்தொழிலை விட்டனர்ஆடுமாடு மேய்த்தலைக் கைக்கொண்டனர்சிலர் வேளாண்மையில் ஈடுபட்டுச் சமவெளியில் வாழ்ந்தனர். வேட்டுவரின் இம்முன்னேற்றம் பற்றி எட்கார் தர்ஸ்ட்டனும் (Edgar Thurston) தனது தென்னிந்தியக்குலங்களும் குடிகளும்” (Castes and Tribes of Southern India) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னேற்றமடையாத வேட்டுவர் சிலர் இக்காலக்கட்டத்தில் வழிப்பறி செய்யும் ஆறலைக் கள்வர்களாகவும்கொள்ளையடிப்பவர்களாகவும் இருந்தனர். இதனை சுந்தரரின் திருமுருகன் பூண்டிப்பதிகத்தால் அறியலாம். சுந்தரர் திருமுருகன் பூண்டிக்குச் சென்றபோதுவடுக வேடுவர் அவரை வழிப்பறி செய்ததாகக் குறிப்பிடுவார்.

பின்னர் வேடுவர் திருந்தியதாகத் தெரிகிறது. திருமுருகன் பூண்டிப் பதிகத்தில் வடுக வேடுவரைக் கடுமையாக சாடிய நாயன்மாராகிய சுந்தரர். திருவெஞ்சாங்கூடல் பதிகத்தில் வேடர் விரும்பிவாழ் வெஞ்சமாக் கூடல்” என்று வேட்டுவரைப் பொதுப்படையாக கூறுகிறார். இதில் வேட்டுவரை இவர் குறை கூறவில்லை. வேட்டுவர் பலர் வெஞ்சமாக்கூடல் இறைவர்க்கு அறக்க்கொடைகள் விட்டுள்ளனர். இவர்கள் இறையன்பிலும் மேம்பட்டு விளங்கினர்ஓரிடத்தில் நிலையாக வாழவும் தலைப்பட்டனர்.

இக்காலக் கட்டத்தில் திருமுருகன் பூண்டிநாமக்கல்கொடுமுடி,திருவெஞ்சமாக்கூடல் மற்றூம் பேரூர் முதலான இடங்கள் சைவ சமய வழிபாட்டு மையங்களாகத் திகழ்ந்தன. திருமுருகன் பூண்டிவெஞ்சமாக்கூடல் மற்றூம் கொடுமுடி ஆகிய தலங்களில் வேட்டுவரே பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சங்க காலத்தில் வேட்டுவர் யானைத் தந்ததின் உதவியோடு பொன்னைத் தோண்டி எடுத்ததாக இலக்கியம் கூறும். சங்க காலத்தையடுத்து வெஞ்சமன் எனும் வேட்டுவ அரசன் திருவெஞ்சமாக்கூடலைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான்.

சோழர் காலம்


கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் ஆதித்தசோழன்ராசா வேடர்களை வென்று கொங்கு நாட்டினைக் கைப்பற்றினான். இந்நிகழ்ச்சி கொங்கு நாட்டின் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். இதனால் வேட்டுவர்கள் அரசர்களாக இருந்தமை புலனாகும். இக்காலத்தில்தான் நாடுகள்வளநாடுகள் முதலிய அரசியல் பிரிவுகள் தோன்றின;பிரமதேயங்கள் நிறுவப்பட்டன.

கி.பி 10-ஆம் நூற்றாண்டளவில் கொங்கில் குடியேறிய கொங்கு வேளாளர்கள்,நீர்வசதி உள்ள இடங்களில் தமது இருப்பிடங்களை அமைத்துக் கொண்டதாக திரு மர்ட்டன் (Mr Murton) குறிப்பிடுவார். தொண்டை மண்டலத்திலிருந்தும்சோழ மண்டலத்திருந்தும் கொங்கில் குடியேற்றப்பட்ட கொங்கு வேளாளர்கள்முன்பே விவசாயத்தில் தேர்ச்சிப் பெற்றிருந்ததால் கொங்கு நாட்டில் ஏரிவாய்க்கால் பாசனங்களை ஏற்படுத்தினர். நீர்பாசனத்துடன் கூடிய விவசாயம் பெருகியது. சோழ வேந்தர்கள் அனைத்து மக்களையும் விவசாயத்தில் ஈடுபடுத்தப் பெருமுயற்சி மேற்கொண்டனர்பல சலுகைகளையும் வழங்கினர். கல்வெட்டுகளில் வேளாளர்கள் கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே குறிப்பிடப் பெறுகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கொங்கு நாட்டின் பூர்வகுடிகளான வேட்டுவர்களுக்கும்குடி புகுந்த வேளாளர்களுக்கும் பத்துபதினோறாம் நூற்றாண்டுகளில் சில பூசல்கள் நிகழ்ந்தன. ஆனால் கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டுகளில் இப்பூசல்கள் மறைந்து,இவர்களிடையே சமரசம் ஏற்பட்டது. நில உரிமைகளும்கோயில் வழிபாட்டு,முப்பாட்டு உரிமைகளும் வேளாளர் கைக்கு மாறின. வேட்டுவரில் பலர் வேளாளர்களாக மாறினர். வேளாளரின் பாதிப் பங்காளியான வேட்டுவர்கள் என்று கண்ணன் கூட்டத்தார் செப்பேடுகளும் இதனைக் குறிப்பிடுகின்றன.

 சோழன் பூர்வ பட்டயம்வேட்டுவர்வேளாளரிடையே நிகழ்ந்த காணியாட்சி உரிமை மாற்றம்பொருளாதாரத் துறையில் வேளாளரின்
உயர்ச்சி ஆகியவற்றை விரித்துக் கூறுகிறது. வேட்டுவர்களைப் போன்று வேளாளர்களும் கூட்டப்பெயர்களை (குலம்) வைத்துக்கொண்டனர்.
சில கூட்டப் பெயர்கள் வேளாளர் மத்தியிலும்வேட்டுவர் மத்தியிலும் காணப்படுகின்றன. அவை அந்துவன்அக்கினிஇந்திரன்கீரைகாடைமூலன்,மணியன்பனையன்பாண்டியன்சேரன்பூந்சந்தைவெலையன்காரிபுன்னை மற்றும் பொன்னன் என்பனவாகும். இப்பொதுக் குலப் பெயர்களால் இருவரிடையே ஏற்பட்ட நெருக்கமான உறவு புலனாகிறது.

சோழருக்குப் பின்னர்


சோழரது ஆட்சி கொங்கு நாட்டில் மறைந்த பின்னர்பாண்டியரும்,ஹொய்சாலரும் கொங்கு நாட்டில் மேலாண்மை செலுத்தினர். வேட்டுவ வீரர்களின் வில்லாற்றலில் முழு நம்பிக்கை கொண்ட பாண்டியர்தமது படைகளில் பெருமளவில் வேட்டுவ வீரர்களை அமர்த்திக் கொண்டனர். சில வேட்டுவ வீரர்கள் படைத்தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர். சுந்தர பாண்டியனது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற போரில் பகைவர்களை வெட்டி வீழ்த்திவீரமரணம் எய்திய அந்தியூரனுக்கு நடுகல் எடுக்கப்பட்ட செய்தி இங்கு நினைவு கூறத்தக்கது.

விசயநகர வேந்தரது ஆட்சிக் காலத்தில் தெலுங்கு விவசாயிகளும்சக்கிலி,நெசவாளர்வண்ணான்மருத்துவர் முதலான குடிப்படைகளும்விசயநகர வீரர்களும் கொங்கு சமுதாயத்தில் சங்கமம் ஆயினர். இதனால் கொங்கு நாட்டில் தெலுங்கர் ஆதிக்கமும் எற்படலாயிற்று. இக்கால கட்டதில் கொங்கு நாடு வேட்டுவவெள்ளாள பட்டக்காரர்களுள் தென்னிலைபுரவிபாளையம் மற்றூம் திங்களூர் பட்டக்காரர் ஆகியோர் புகழ்பெற்றனர்.

காணியாளர்


கொங்கு நாட்டில் வேட்டுவர் சிலர் காணியாளர்களாகச் சிறப்புற்று விளங்கினர். இவர்களுள் புத்தூர்பள்ளக்குழிகழனூர்முத்தப்பனூர்தும்பங்குறிச்சிசெளதாபுரம்,இளநகர்பிரிதிகாளிப்பட்டிஊசிப் பாளையம்பழமங்கலம் மற்றும் குலவிளக்கு முதலான ஊர்களில் வேட்டுவரே காணியாளராக இருந்தனர். அஞ்நூற்றுமங்கலம்,திருமழபாடிகுளக்குறிச்சிபடலோடி குறிச்சிதென்னிலை மற்றூம் இருப்பலி முதலான ஊர்களில் வேட்டுவர் காணியாட்சியாளர்களாகத் திகழ்ந்தனர். காணியாட்சியாளருள் வெங்கச்சி வேட்டுவர் சிலர் புகழ் பெற்று விளங்கினர். முன்னை வேட்டுவர் வடபரிசார நாட்டுக் கோசனத்திலும்சாந்தப்படை வேட்டுவர் மற்றும் கரைய வேட்டுவர் ஆகிய இருவரும் பூந்துறைநாட்டு அறச்சலூரிலும் காணியாளர்களாகத் திகழ்ந்தனர்.

ஊராளிகள்


வேட்டுவர் பலர் கொங்கு நாட்டின் பல ஊர்களில் ஊராளிகளாகத் திகழ்ந்தனர். இவர்களுள் சிலரைப்பற்றிக் கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன. இவர்களுள்,மேல்கரை அரையநாட்டு வடிவுள்ள மங்கலத்தில் (துக்காச்சி) ஊராளி வேட்டுவன் அழகன்காளியும்பன்றிநாட்டு குளப்பாடியில் ஊராளி நெனூர் அத்தானியும் (நெருப்பூர் நடுகல்) எழுகரை நாட்டு பெரிய விளங்கியில் ஊராளி சுரண்டை வேட்டுவன் சிலம்பன் சிறியானும்கீழ்க்கரைப் பூந்துறை நாட்டுப் பருத்திப்பள்ளியில் ஊராளி வேட்டுவன் அதியமான் நங்கனும் குறிப்பிடத்தக்கவராவர். அந்தியூர் மலைகளில் (பருகூர் மலைகள்) வாழும் பழங்குடிகளில் ஊராளி என்போரும் ஒரு பிரிவினர் என்பது வேட்டுவரின் தொன்மைச் சிறப்பினை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. சோழன் பூர்வ பட்டயத்தில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வேட்டுவர்கிராமத் தலைவர்களாக (ஊராளி மற்றும் மன்னாடி) நியமிக்கப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது.

பாளையக்காரர்கள்


சேரசோழ மற்றும் பாண்டியரது ஆட்சிக்குப் பின்னர்கொங்கு மண்டலம் வேட்டுவ இனத்தைச் சார்ந்த பாளையக்காரர்களால் ஆளப்பட்டு வந்தது. இவ்வாறு ஆளப்பட்டு வந்த பகுதிகளுள் சங்ககிரிசாமப்பள்ளி (தென்னிலை) காவரிபுரம்,ஆண்டியூர் முதலானவை குறிப்பிடத்தக்கவையாகும். இப்பகுதிகளில் வேட்டுவப் பாளையக்காரர்கள் கோட்டைகள் கட்டிக் கொண்டு சிறப்புடன் ஆண்டுவந்தனர். கக்குவாடி பாளையக்காரரும் பண்டுபுகழ்பெற்று விளங்கினர். இவர்களுள் நல்லண்ணக் கவுண்டர் குறிப்பிடத்தக்கவராவர். இவருக்குப் பாண்டியவேந்தன் எழுபது வகை விருதுகள் வழங்கினான் என்று மெக்கன்ஸி குறிப்பிடுவார்.

படைத்தலைவர்கள்


சங்ககாலம் முதற்கொண்டே வேட்டுவவீரர் பலர் பாண்டியரின் ஆட்டியை விரிவுபடுத்துவதில் பெரும்பணி புரிந்துள்ளனர். சிலகாலம் இவர்கள் சோழர்,பாண்டியர்சேரர்நாயக்கர் மற்றும் ஹொய்சாளர் முதலானோரது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் பணியில் பெரிதும் ஈடுபட்டிருந்தினர். வேட்டுவரில் பலர் வலிமைமிக்க படைத்தலைவர்களாகவும் விளங்கினர். வீரத்திற்கும்,அஞ்சாமைக்கும் பெயர் பெற்ற வேட்டுவர் இலக்கியங்களில் பாராட்டப் பெறுகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலும் அதன் பின்னரும்வேட்டுவ கவுண்டர்கள் விவசாயத்திலும்தொழில்த்துறையிலும்கல்வித்துறையிலும் மற்றும் உத்தியோகத்துறையிலும் மிகவுல் பின் தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

வேட்டையாடுதல்நாட்டைக் காத்தல் ஆகிய தொழில்களை மேற்கொண்ட வேட்டுவர்ஊர்த் தலைவர்களாகவும் (ஊராளி)படைவீரைகளாகவும்,படைத்தலைவர்களாகவும்குறுநில மன்னர்களாகவும் மற்றும் பட்டக்காரர்களாகவும் பல்வேறு காலக் கட்டங்களில் பணியாற்றியுள்ளனர். வேட்டைத் தொழிலை மேற்கொணட வேட்டுவர்பின்னர் காடுகளை அழித்து,விவசாய நிலங்களாக மாற்றி வேளாண்மை புரிந்துள்ளனர். இவர்கள் இறைப்பணியில் மேப்பட்டு விளங்கிப் பல திருக்கோயில்களை அமைத்தும்,கோயில்களைப் புதுப்பித்தும்அவற்றில் தொடர்ந்து பூசனை நடைபெற பல அறக்கொடைகளை அளித்தும் தொண்டு புரிந்துள்ளனர். இவ்வாறு வேட்டுவர்கள்,கொங்கு நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைத்துகொங்கு நாட்டு வரலாற்றில் தனக்கெனத் தனித்தோர் இடத்தைப் பெற்றுள்ளனர்.

பல வேட்டுவர்கள் வேளாண்மைத் தொழில் செய்து வேளாளர் ஆயினர். கொக்கராயன் பேட்டைக் கல்வெட்டு இதற்கோர் சான்று.
வேட்டுவர்கள் பழங்கொங்கு நாடு முழுவதிலும் வாழ்ந்து வந்தனர். இருப்பினும் வடகொங்கில் இவர்கள் மிகுதியாக வாழ்ந்தனர். காவிரிநொய்யல்அமராவதி ஆற்றங்கரைகளில் வேட்டுவ கவுண்டர் குடியிருப்புகள் மிகுதி.

வேட்டுவ குலத்தினின்றும் வேளாளர்களாக மாறிய இவர்கள்தமது பெயருடன் வேட்டுவ இனத்தின் பெயரையும் இணைத்துக் கொள்ள மறக்கவில்லை. எடுத்துக்காட்டாக, கரூர் பசுபதியீசர் கோயில் கல்வெட்டு ஒன்று புன்னம் பூவாணிய வேட்டுவரில் வேளான் கரியானான மருதங்கவேளான்” என்பவன் பசுபதியீசர்க்கு மூன்று கழஞ்சு பொன் அளித்தான் எனும் செய்தியைத் தெரிவிக்கின்றது.

பின்னர் காலம் சில சென்றபின் தமது பெயரில் வேட்டுவர் எனும் சொல்லை நீக்கிவிட்டு வேளாளரும் தமது கூட்டப் பெயர்களில் (குலப் பெயர்கள்) சில பொதுவான பெயர்களைக் கொண்டுள்ளமையாலும் இது விளங்கும். மற்றொரு எடுத்துக்காட்டாக பாண்டியன்பூச்சந்தைகாரிமூலன்மணியன்பனையன்காடை,கீரைஅந்துவன் மற்றும் வெலையன் ஆகிய குலப் பெயர்கள் இருவரிடையே பொதுவாக காணப்படுகின்றன. அடுத்துவேளாளர் கோயில்கள் சிலவற்றில் வேட்டுவர்க்கும்வேட்டுவர் கோயில்கள் சிலவற்றில் வேளாளர்க்கும் முப்பாடு வழங்கப்பட்டது. மேலும் பட்டாலிபருத்திப்பள்ளிதும்பங்குறிச்சி போன்ற ஊர்களின் காணியார்களாக வேட்டுவர் மற்றும் வேளாளர் ஆகிய இருவருமே குறிக்கப்பட்டுள்ளனர்.

கொங்கு மண்டலத்தில்  வேளாளர்கள்  குடியேற்றப்பட்ட போது சாட்சி கையெழுத்திட்டவர்களில் ஒருவர் வேட்டுவர் என்பதனை கொங்கு காணியாள பட்டயம் கூறுகிறது.

பிற்காலத்தில் முதலாம் ஆதித்தச் சோழனின் ஆட்சிக்காலத்திலும் வேளாளர் சிலர் கொங்கு மண்டலத்தில் குடியேற்றப்பட்டனர்.

 வேட்டுவக்கவுண்டர் இன மன்னர்கள்


கொங்கு சக்கரவர்த்தி தலையூர் காளிமன்னன் (அண்ணமார் கதையின் வெற்றித்திருமகன்).
அல்லால இளைய நாயகன் (ஜேடர்பாளையம் அணை மற்றும் இராஜ வாய்க்கால் வெட்டியவர் ).


*காளிங்கராயன் (காளிங்கராயன் அணை கட்டிய பட்டயம்).
செயங்கொண்ட சோழ கொங்காள்வான் (கொடிவேரி அணை கட்டியவர்).
செய்யான் பல்லவராயர் (கொங்கு மண்டல சதகம் ).
திரு.கஜேந்திர மகாராஜன் (காஞ்சிபுரம் செப்பேடு ).
சிறுத்தலை வேட்டுவ ராஜா.
குன்னி வேட்டுவ ராஜா.
*வேள் ஆய் அண்டிரன் (கடையேழு வள்ளல்).
*வேள் ஆய் இனியன் .
கொடுமுடி (வடகரையாத்தூர் நடுகல்).
*வல்வில் ஓரி (கடையேழு வள்ளல்).
*கண்டீர கோப்பெருநள்ளி(கடையேழு வள்ளல்).
*வில்லி வேட்டுவ மன்னர் (ஸ்ரீ வில்லிபுத்தூர்).
நீலியக்கூடன் .
சோழப்பேரரசி செம்பியன் மகாதேவி (கொல்லிமலையில் இருந்து கண்டராதித்த சோழனுக்கு(949-959) மணமுடிகப்பட்டவர்.
கொல்லிமலையை ஆண்ட வேட்டுவராஜாவின் மகள் ஆவார்).
கவினி(இலங்கை)முதல் அரசி.
*வால்மீகி (வட மொழியில் இராமாயணம் இயற்றியவர் ).
*குகன் (இராமாயணம் ).
*ஏகலைவன் (உலகின் மிகச் சிறந்த வில்லாளி,மகாபாரதம் ).

வேட்டுவர்களின் முதுமொழிகள்


   * கும்பிடு கேட்காததும் கும்பிட்டாரை வெட்டாததும் குருகுலத்து வேட்டுவ ராஜாக்களின் பண்பாம்.
   * வேர் வகையை எண்ணினாலும் வேட்டுவர் வகையையும்,வரலாற்றையும் எண்ண முடியாது.
   * சத்தியம் காக்கும் வேட்டுவர் குல அரச வம்சம் சத்தியமாய் வெட்ட வெட்ட தழைக்கும்...

வேட்டுவ குலத்தை சேர்ந்த முடிமன்னர்கள்



தமிழ் மண்ணில் முதன் முதலில் படைதொழிலில் ஈடுபட்ட வேட்டுவ இனத்தில் இருந்துதான்
சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் உருவானார்கள் .

சங்க காலங்களில் ஆண்ட வேட்டுவ குறுநில தலைவர்கள்


வல்வில் ஓரி (கொல்லி மலை தலைவன் ),கண்டீர்க கோபெரு நள்ளி( தோட்டி மலை தலைவன் ,தோட்டி மலை கோவை ,மேட்டுபாளையம் அருகில் உள்ளது ),கடிய நெடு வேட்டுவன் ( கொடைகானல் மலை தலைவன் ),குமணன் (முதிர மலை தலைவன் ,முதிர மலை கோவை ,உடுமலை அருகில் உள்ளது )பிட்டன் கொற்றன் ( குதிரை மலை தலைவன் ,குதிரை மலை சேலம் பகுதில் இருக்கிற மலை )தகடூர் வேட்டுவ குல தலைவன் அதியமான் ,பழையன் ,பழையன் மாறன்,கொடுமுடி ,பாண ,வாண மன்னர்கள் (தமிழகத்தின் வட பகுதியை ஆண்டவர்கள் )பண்ணன் ,ஆய் எய்னன்(பழனி மலை தலைவன் ),ஆய் ஆண்டிரன் (பொதிய மலை தலைவன் )கொடும்பூர் வேட்டுவ குல தலைவன் இருங்கோவேள் போன்ற குறுநில தலைவர்கள் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள் .

இடைகால மற்றும் பிற்காலங்களில் சேர ,சோழ ,பாண்டிய அரசர்களுக்கு கீழ் இருந்த வேட்டுவ குறுநில மன்னர்கள் .
பளுவேட்டரையர் ,இருக்குவேளிர்,கொல்லி மழவன் ,மாவலி வாணதிராயர்,வாணகோவரையர்கொங்கு பாண்டியர் ,கொங்கு சோழர் அள்ளால இளையன் செயங்கொண்ட சோழ கொங்காள்வான் போன்ற குறுநில மன்னர்கள் வேட்டுவர் குலத்தை சேர்ந்தவர்கள் .


செய்யான் பல்லவராயன்



தொல்லுல கத்தினிற் றுட்டரை வெட்டித் துணித்ததனாற்
சொல்லிய போசள வீர புசபலன் றுகளுறுசீர்ப்
பல்லவ ராய னெனப்பட்ட மீயப் படைசெலுத்த
வல்லவன் வேட்டுவச் செய்யானும் வாழ் கொங்கு மண்டலமே!
(கொங்குமண்டல சதகம்)

அல்லாளன் இளையான்

வடமுக நின்று வருகா விரியின் வனத்தையென்றுந்
திடமுறு கொங்கினும் பாசன மாகச் செலப்பிரித்த
அடல்கொ ளல்லாள னிளையான் பெருக்க மமைந்துவளர்
வடகடை யாற்றூர் திகழ்வது வுங்கொங்கு மண்டலமே!
(கொங்குமண்டல சதகம்)

கோபண மன்றாடி

தென்பாண்டி நாட்டினிற் சிங்களர் தீமை செயச்செழியன்
முன்போ யகற்ற வலியற்ற காலத்தின் மொய்ம்பொடவர்
பின்போடத் தானை கொடுமோட்டு வீரன் பெருங்களந்தை
மன்பூ வலனெனுங் கோபண னுங்கொங்கு மண்டலமே!
(கொங்குமண்டல சதகம்)

அறுசீர் விருத்தம்

வேதிய ராசு செல்வம் மிகுந்திடு வணிகர் நல்ல
நீதிவேட் டுவரின் ராச நிலமைகுன் றாதநாடு
மாதுளை மறுக்கை தேமா மல்லிகை தென்னை புன்னை
கோதிலா வனங்கள் சூழ்தென் குறிப்புநன் னாடு தானே!
(பழங்கவித்திரட்டு)

எழு சீர் விருத்தம்

சந்ரபுரி மாநகரி லிந்ரவோ லக்கமாய்த்
தழைத்திட விளங்கு மடமாம்,
தண்டமிட் கவிவாணர் கொண்டாட வேவந்த
சற்சங்க மான மடமாம்,
விந்தையுட னேமுனிவ ரானமதி யோர்களும்
மெய்ப்பாய்வி ளங்கு மடமாம்,
வீரமிகு ரெணசூர அப்பச்சி மாரய்யன்
வீற்றிருக் கின்ற மடமாம்,
கொந்துலவு குலமாதர் சிந்துநட னம்பரவு
கொலுவலங் கார மடமாம்,
கூறரிய கொங்குமலை யாளமும் ஈழமுங்
கொண்டாட வந்த மடமாம்,
அந்தமிக வாகவே பழனியய் யன்நீதி
அர்ச்சனைகள் செய்யு மடமாம்,
அம்புவியில் மெய்ப்பான அப்பச்சி மாரய்யன்
அன்னந்தந் துதவு மடமே.
(பழங்கவித் திரட்டு)

குருகுல வரலாறு
எண்சீர் விருத்தம்

முத்திதருஞ்சத்துருசங்காரிருத்ரி
முக்கணிசற் குணவிமலி யருளா னந்தி
நலமாகப்பருவதமாங்கயிலைதன்னை
பத்திரமாய்க் காத்திடும்பூ வலவன் வேடன்
பார்புகழும் வெட்டுவன்கள் வலவன் சீல
வித்தைமிகும் மாவலவன் சரிதங் கூற
வேண்டுவரந் தானுதவிக் காப்பா ளின்றே!
(பஞ்சவர்ண ராஜகாவியம்)

வல்வில் ஓரி

மூவேழ் துறை முறையுளி கழிப்பிக்
கோவெனல் பெயரிய காலை யாங்கது
தன்பெய ராகலி னாணி மற்றியா
நாட்டிட னாட்டிடன் வருது மீங்கோர்
வேட்டுவ ரில்லை நின்னொப் போர்…..
(புறநானூறு)

கடிய நெடு வேட்டுவன்

முற்றிய திருவின் மூவ ராயினும்
பெட்பின் றீதல் யாம்வேண் டலமே,
விறற்சினந் தனிந்த விரைபரிப் புரவி
யுறுவர் செல்சார் வாகிச் செறுவர்
தாளுளந் தபுத்த வாண்மிகு தானை
வெள்வீ வேலிக் கோடைப் பொருன
சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
மான்கணந் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்
நோன்சிலை வேட்டுவ நோயிலை யாகுக!
வார்கலி யாணர்த் தரீ இயகால் வீழ்த்துக்
கடல்வயிற் குழீஇய வண்ணலங் கொண்மூ
நீரின்று பெயரா வாங்குத் தேரோ
டொளிறுமருப் பேந்திய செம்மற்
களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே!
(புறநானூறு)

வேட்டுவர் பெருமைஎழுசீர் விருத்தம்

கங்கைச் சடைமுடி வெண்ணீச ருக்கன்று
கண்பதித் திட்ட பெரியோர்
கண்ணப்ப சீர்பாத சேகரர் மேலான
காளத்தி வெற்பு முடையோர்
செங்கைசிலை யூன்றியே வில்வத்தி லேறியே
சிவராத்திரி கண்ட பெரியோர்
தெட்சணா புரமென்ற பூமிக்கு முடையவர்
சீரான கீர்த்தி யுடையோர்
கொங்குதல முடையவர் கொற்றவர் கற்றவர்
கொல்லிங்கி ரிக்கு முடையோர்
கூறரிய பாண்டியன் சோழன்சே ரன்வந்து
கொண்டாடு வலிமை யுடையோர்
வங்கக் கடலுலகில் வீரான வெட்டுவர்கள்
வாகைமா லைப்பு யத்தோர்
வாய்வீறு சொன்னவரின் மார்ப்பைப்பி ளந்திடுவர்
வளராச மணவா ளரே!
(பழங்கவித்திரட்டு)

வேட்டுவர் இல்லத்து பெண்
ஊரின் பெருமை உணர்த்தினாள் ஒருத்தி!

" முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத்தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீஇப், பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்து விளையாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்
இல்வழங்காமையின் ...............................
..................................................................
................................. பாண ! தங்காது
வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே."
(புறநானூறு : பாடல் : 320
பாடியவர் : வீரைவெளியனார்)
வேட்டுவ மன்னர் அழகன் காளி
“ஸ்வஸ்திஸ்ரீ பூர்வதேசமும் கங்கையும்......
சோழர்க்குச் செல்லா நின்ற யாண்டு
........ஊராளி வேட்டுவன் அழகன்
காளி அவன் இதில் பட்டான்.”(துக்காச்சி கல்வெட்டு )

வேட்டுவ மன்னர் அந்தியூரன்

“ஸ்வஸ்தி ஸ்ரீ சுந்தரபாண்டியா
தேவற்கு யாண்டு 6 – வது
வடகரை நாட்டு உரகடங்கச்சதி
கண்ணையன் வேட்டுவரில்
அந்தியூரன்”

கரைய குல சொக்கன் (புகழ்(பழ மங்கலம் )

“வாய்த்த புகழ் மங்கலத்து வந்தெதிர்த்த மாற்றலரைச்
சாய்த்த மருள் வென்ற சயம்பெருகச் சீர்த்த புகழ்
நிக்குவனம் கற்பொறிக்கப்பட்டான் கரைய குலச்
சொக்கனேந்தலேவுலகிற் காண்.
இக்கற்பொறி ரகூஷிப்பான் பாதம்என் தலை மேலே”

சுண்டை வேட்டுவன் புகழ்

“ஸ்வஸ்தி ஸ்ரீ எழுகரை நாட்டு அக்கைசாலை
கங்கை என்று பேரிட்டு இக்
குளம் அட்டினேன் பெரிய விலங்கி
ஊராளியாகிய சுண்டை வேட்டுவன்
சிலம்பன் சிறியன் ஆன எழுக



ரை நாட்டு அக்கை சாலைகள் மாத்த
ஆராத பிள்ளையேன் பேர் மலை”

சிலப்பதிகாரத்திற்கு முன் 

"ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே" (தொல். அகம். 967)








உச்சி வெயில் பட்டு வங்கக்கடல் வற்றியதும் இல்லை ...
எதிரியை கண்டு கொங்கு வேட்டுவ படை பிண் வாங்கியதும் இல்லை ...



















இல்லை என கேட்டால் கொடுப்பது இறைவன் குனம்...
கேட்காமல் கொடுப்பது வேட்டுவ கவுண்டர் இனம்...
பழகி பார் பாசம் புரியும்...
பகைத்துப்பார் வேட்டுவ கவுண்டர் வீரம் புரியும்
*வெட்ட வெட்டத் தழைக்கும் வேடுவர் படை *
*கும்பிட்டரை வெட்டாத குரு குலத்து வேட்டுவரஜாக்கள் *
போர் வந்த காலத்தே புறம்போய் பதுங்காது
காவுண்டதாலே கவுண்டர் என்னும் பெயருமுண்டு ! ! !
கொங்கு நாடு "வேட்டுவக் கவுண்டர்"
வந்தாரை வரவேற்பது நம்பிநோருக்கு உயரையும் கொடுப்பது வேட்டுவ
வேட்டுவ கவுண்டனின் குணம்.
கேட்காமல் கொடுப்பது வேட்டுவ கவுண்டர் இனம்...
பழகி பார் பாசம் புரியும்...
பகைத்துப்பார் வேட்டுவ கவுண்டர் வீரம் புரியும்
*வெட்ட வெட்டத் தழைக்கும் வேடுவர் படை *
*கும்பிட்டரை வெட்டாத குரு குலத்து வேட்டுவரஜாக்கள் *
போர் வந்த காலத்தே புறம்போய் பதுங்காது
காவுண்டதாலே கவுண்டர் என்னும் பெயருமுண்டு ! ! !
கொங்கு நாடு "வேட்டுவக் கவுண்டர்"
வந்தாரை வரவேற்பது நம்பிநோருக்கு உயரையும் கொடுப்பது வேட்டுவ
வேட்டுவ கவுண்டனின் குணம்.


கொங்கு நாட்டு வேட்டுவக்கவுண்டர்கள் வீர வரலாறு
வரலாற்று வித்தகர்களஞ்சியச் செம்மல் பேராசிரியர் ம இரா தங்கமணி
    ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ பக்கம் 84 | கொ-2
    அவினாசிப் புலவர் இயற்றிய திங்களூர் நொண்டி நாடகம்
    கல்வெட்டறிஞர் புலவர் செ இராசுவி இராமமூர்த்திமுனைவர் எஸ் பி கந்தசாமிஆர் பூங்குன்றன் போன்றோர்.
    சுந்தரர் தேவாரம் – திருமுருகன் பூண்டி பதிகம் 207 – 210. ஒருவேளை வடுக வேடுவர் சமண சமயத்தினராகவும் இருக்கலாம்.
    எனவேதான் சமயக்காழ்ப்பை மனதில் கொண்டு சுந்தரர் வேடுவரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    சுந்தரர் தேவாரம் – வெஞ்சமாங்கூடல் பதிகம். பக்கம் 211 – 214.
    Dr. Nagaswamy Roman Karur http://tamilartsacademy.com/books/roman%20karur/cover.html
    Kongudesarajakkal , Government manuscript Library, Chennai.